மேலும்

அடுத்த மாதம் மோடியைச் சந்திக்கிறார் மகிந்த – புதுடெல்லியில் இருந்து அழைப்பு

சிறிலங்காவின் புதிய எதிர்க்கட்சித் தலைவராக பதவியேற்றுள்ள மகிந்த ராஜபக்சவை புதுடெல்லிக்கு வருமாறு, இந்திய அரசாங்கம் அதிகாரபூர்வமாக அழைப்பு விடுத்துள்ளது.

இந்த அழைப்பை ஏற்று, மகிந்த ராஜபக்ச அடுத்தமாதம் முதல் வாரத்தில் புதுடெல்லிக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

இந்தப் பயணத்தின் போது, மகிந்த ராஜபக்ச, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேச்சுக்களை நடத்துவார் என்று, மகிந்த ராஜபக்சவின் தனிப்பட்ட செயலர் ஒருவர், கொழும்பு வாரஇதழ் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.

கடந்த ஒக்ரோபர் மாதம் 26ஆம் நாள் சிறிலங்காவில்  ஆட்சிக் கவிழ்ப்பு இடம்பெறுவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னர், மகிந்த ராஜபக்ச புதுடெல்லிக்குப் பயணம் மேற்கொண்டு, இந்தியப் பிரதமரைச் சந்தித்திருந்தார்.

அரசியல் சதித் திட்டம் தோல்வியில் முடிந்த பின்னர், எதிர்க்கட்சித் தலைவராகப் பதவியேற்றுள்ள நிலையில் மகிந்த ராஜபக்ச மீண்டும் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *