நாடாளுமன்றத்துக்குள் கத்தியுடன் ஐதேக எம்.பி – வசமாக சிக்கினார்
நாடாளுமன்றத்தில் இன்று நடந்த குழப்பத்தின் போது, ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர் பாலித தெவரப்பெரும கத்தியுடன் மோதலில் ஈடுபட்டமை அம்பலமாகியுள்ளது.
பாலித தெவரப்பெருமவின் காற்சட்டைப் பையினுள் கத்தி இருப்பதையும், அவர் கையில் கத்தியுடன் மோதலில் ஈடுபட்டதையும், ஊடகவியலாளர் சஜீவ சிந்தக துல்லியமாக படம்பிடித்துள்ளார்.
அதேவேளை மகிந்த அணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணவீர கைகளால் ஐதேக உறுப்பினர்களைத் தாக்கும் காட்சிகளும் பதிவாகியுள்ளன.