சிறிலங்காவை உன்னிப்பாக அவதானிக்கிறது சீனா
சிறிலங்காவின் நிலவரங்களில் ஏற்பட்டு வரும் மாற்றங்களை மிகவும் உன்னிப்பாக அவதானித்து வருவதாக, சீனா தெரிவித்துள்ளது.
பீஜிங்கில் இன்று நடந்த நாளாந்த செய்தியாளர் சந்திப்பில், சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் லூ காங் இதனைத் தெரிவித்துள்ளார்.
அத்துடன், சிறிலங்காவில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிகளை எல்லாத் தரப்புகளும் பேச்சுக்களின் மூலம் தீர்த்துக் கொள்ள முடியும் என்று சீனா நம்புகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.