மேலும்

கிழக்கு கொள்கலன் முனையம் இந்தியாவுக்கு இல்லை – சிறிலங்கா திட்டவட்டம்

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையம் எந்த நாட்டுக்கும் வழங்கப்படாது என்று சிறிலங்காவின் துறைமுகங்கள், கப்பல் துறை அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

”இந்த விவகாரம் தொடர்பாக, பிம்ஸ்ரெக் மாநாட்டின் போது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன், சிறிலங்கா அதிபர் கலந்துரையாடியிருந்தார்.

இது சிறிலங்காவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால், எந்த நாட்டுக்கும் வழங்கப்படாது.

மேற்கு கொள்கலன் முனையத்தை அமைப்பதற்கான நகர்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்த முனையத்தை அமைப்பதற்கு இந்தியாவும் ஜப்பானும் ஒத்துழைக்கும் என்று சிறிலங்கா அரசாங்கம் எதிர்பார்க்கிறது” என்றும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *