மேலும்

மாதம்: August 2018

அட்மிரல் விஜேகுணரத்னவை கைது செய்ய நீதிவான் உத்தரவு

பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியான அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவை கைது செய்ய நடவடிக்கை எடுக்குமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு, கோட்டே நீதிவான் நீதிமன்ற நீதிவான், லங்கா ஜெயரத்ன நேற்று உத்தரவிட்டார்.

அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலருடன் சிறிலங்கா பிரதமர் சந்திப்பு

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தி்ன் தெற்கு, மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான உதவிச் செயலர் அலிஸ் வெல்ஸ்ஸை, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

சிறிலங்கா கடற்படையின் கையில் அமெரிக்க போர்க்கப்பல்

அமெரிக்க கடலோரக் காவல்படையின் பயன்பாட்டில் இருந்து நீக்கப்பட்ட யுஎஸ்சிஜி ஷேர்மன் என்ற ஆழ்கடல் ரோந்துக் கப்பல் நேற்று முன்தினம் சிறிலங்கா கடற்படையிடம் அதிகாரபூர்வமாக கையளிக்கப்பட்டது.

தமிழர் நில ஆக்கிரமிப்புக்கு எதிராக முல்லைத்தீவில் திரண்ட மக்கள் வெள்ளம்

முல்லைத்தீவில் மகாவலி அபிவிருத்தி அதிகார சபையின் துணையுடன் முன்னெடுக்கப்படும் சிங்களக் குடியேற்றங்களையும், தமிழர்களின் காணிகள் ஆக்கிரமிக்கப்படுவதையும் தடுத்து நிறுத்தக் கோரி நேற்று பாரி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

வடக்கு வீடமைப்புத் திட்டத்தை குழப்புகிறதா இந்தியா? – சிறிலங்காவிடம் கேள்வி எழுப்பியது சீனா

சீனாவினால் வடக்கில் முன்னெடுக்கப்படவிருந்த 40 ஆயிரம் வீடுகளை அமைக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டதன் பின்னணியில், இந்தியாவின் தலையீடு இருந்ததா என்று, சிறிலங்கா அரசாங்கத்திடம் சீனா கேள்வி எழுப்பியுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தியப் பெருங்கடலில் அமைதியை உருவாக்க வேண்டும் – சிறிலங்கா, வியட்னாம் வலியுறுத்தல்

இந்தியப் பெருங்கடலில் அமைதியும், செழிப்பும் உருவாக்கப்பட வேண்டும் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், வியட்னாமின் துணைப் பிரதமர் பாம் பின் மின்னும் வலியுறுத்தியுள்ளனர்.

முல்லைத்தீவில் இன்று பாரிய போராட்டத்துக்கு அழைப்பு

மகாவலி அதிகார சபையினால் முல்லைத்தீவு மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் சிங்களக் குடியேற்ற முயற்சிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, முல்லைத்தீவில் இன்று பாரிய கண்டனப் போராட்டம் நடைபெறவுள்ளது.

படுவத்தை இரகசிய முகாம் – ஒப்புக்கொண்டார் மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர

கம்பகா- படுவத்தவில் சிறிலங்கா இராணுவத்தின் இரகசிய முகாம் ஒன்று இருந்தது தமக்குத் தெரியும் என்று சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளரான மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர ஒப்புக் கொண்டுள்ளார்.

சிறிலங்காவின் துறைமுகங்கள், விமான நிலையங்களின் அபிவிருத்திக்கு உதவ இந்தியா விருப்பம்

சிறிலங்காவின் துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்களின் அபிவிருத்திக்கு உதவ இந்தியா விருப்பம் கொண்டுள்ளதாக, இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் றொகான் தளுவத்த மரணம்

சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் றொகான் தளுவத்த இன்று காலை மரணமானார். மரணமாகும் போது அவருக்கு வயது 77 ஆகும்.