மேலும்

சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் றொகான் தளுவத்த மரணம்

சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் றொகான் தளுவத்த இன்று காலை மரணமானார். மரணமாகும் போது அவருக்கு வயது 77 ஆகும்.

அவரது இறுதிச் சடங்கு எதிர்வரும் 29ஆம் நாள் புதன்கிழமை மாலை முழுமையான இராணுவ மரியாதைகளுடன் இடம்பெறும் என்று சிறிலங்கா இராணுவத் தலைமையகம் அறிவித்துள்ளது.

1961ஆம் ஆண்டு சிறிலங்கா இராணுவத்தில் இணைந்து கொண்ட ஜெனரல் றொகான் தளுவத்த, 1996 மே 1ஆம் நாள், சிறிலங்காவின் 13 ஆவது இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டார். 1998 டிசெம்பர் 15 ஆம் நாள் அவர் இராணுவ சேவையில் இருந்து ஓய்வுபெற்றார்.

இவரது பதவிக்காலத்திலேயே சிறிலங்கா இராணுவம், சத்ஜய, ஜெயசிக்குறு உள்ளிட்ட முக்கியமான படை நடவடிக்கைகளை முன்னெடுத்ததுடன், முல்லைத்தீவு தளம் புலிகளிடம் வீழ்ச்சி கண்டது உள்ளிட்ட பல இராணுவப் பின்னடைவுகளை எதிர்கொண்டதும் குறிப்பிடத்தக்கது.

இராணுவத் தளபதி பதவியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர், கூட்டு நடவடிக்கைப் பணியகத்தின் தளபதியாக நியமிக்கப்பட்டார்.

2002ஆம் ஆண்டு கூட்டுப் படைத் தளபதி பதவியில் இருந்து விலகிய அவர் பிரேசிலுக்கான தூதுவராக நியமிக்கப்பட்டார். 2005ஆம் ஆண்டு வரை இந்தப் பதவியை வகித்தார்.

தற்போது .இரத்தினங்கள் மற்றும் ஆபரண அதிகார சபையின் தலைவராகப் பணியாற்றி வந்த ஜெனரல் றொகான் தளுவத்த, கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் வேந்தாராகவும் இந்து வந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *