சிறிலங்காவின் துறைமுகங்கள், விமான நிலையங்களின் அபிவிருத்திக்கு உதவ இந்தியா விருப்பம்
சிறிலங்காவின் துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்களின் அபிவிருத்திக்கு உதவ இந்தியா விருப்பம் கொண்டுள்ளதாக, இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.
இந்தியப் பெருங்கடல் கருத்தரங்கில் பங்கேற்க வியட்னாம் சென்றுள்ள சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜூம், ஹனோயில் இன்று சந்தித்துப் பேச்சு நடத்தினர்.
இதன்போதே, சிறிலங்காவின் துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்களின் அபிவிருத்திக்கு உதவ இந்தியா விருப்பம் கொண்டுள்ளதாக சிறிலங்கா பிரதமரிடம், இந்திய வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.