மேலும்

மத்தல விவகாரத்தில் இந்தியாவின் குழப்பம் – அடுத்தவாரம் பதிலளிக்குமாம் சிறிலங்கா

மத்தல விமான நிலைய விவகாரத்தில் இந்தியாவின் அணுகுமுறை தொடர்பாக எழுந்துள்ள குழப்பங்கள் குறித்து இந்தவாரம் சிறிலங்கா அரசாங்கம் விளக்கமளிக்கும் என்று, போக்குவரத்து மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து பிரதி அமைச்சர் அசோக அபேசிங்க தெரிவித்துள்ளார்.

இந்திய விமானத்துறை அதிகாரிகளுடன் பல சுற்றுப் பேச்சுக்கள் நடத்தப்பட்டன. சில அதிகாரிகள், மத்தல விமான நிலையத்துக்கும் சென்று ஓடுபாதையின் தரத்தைப் பரிசோதனை செய்திருந்தனர்.

சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சின் செயலரே இது தொடர்பான ஆவணங்கள் அனைத்தையும் வைத்துள்ளார்.

தற்போது வெளிநாடு சென்றுள்ள அவர் அடுத்த வாரம் நாடு திரும்பிய பின்னர், இது தொடர்பான மேலதிக கருத்துக்களை வெளியிட முடியும்” என்று தெரிவித்துள்ளார்.

மத்தல விமான நிலையத்தை இந்திய விமான நிலைய அதிகார சபையுடன் கூட்டு முயற்சியாக செயற்படுத்தவுள்ளதாகவும், இதற்கான வணிகத் திட்டத்தை இந்திய விமான நிலைய அதிகாரசபையிடம் கோரியுள்ளதாகவும் சிறிலங்கா அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா கூறியிருந்தார்.

எனினும், அத்தகைய எந்த திட்டமும் இந்திய விமான நிலைய அதிகார சபையிடம் கிடையாது என்று இந்திய நாடாளுமன்றத்தில், இந்தியாவின் சிவில் விமானப் போக்குவரத்து இணை அமைச்சர் ஜெயந்த் சின்ஹா தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *