அமெரிக்காவின் பாரிய மிதக்கும் மருத்துவமனை சிறிலங்கா வருகிறது
அமெரிக்காவின் பசுபிக் ஒத்துழைப்பு ஒத்திகைத் திட்டத்தின் ஒரு கட்டமாக, அமெரிக்க கடற்படையின் பாரிய மிதக்கும் மருத்துவமனை சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளது.
அமெரிக்காவின் பசுபிக் ஒத்துழைப்பு ஒத்திகைத் திட்டத்தின் ஒரு கட்டமாக, அமெரிக்க கடற்படையின் பாரிய மிதக்கும் மருத்துவமனை சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளது.
சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கு புதிய பொதுச்செயலாளர் நியமிக்கப்பட வேண்டும் என்று, அண்மையில் கூட்டு அரசாங்கத்தில் இருந்து விலகிய சிறிலங்கா சுதந்திரக் கட்சி அமைச்சர்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.
வவுனியா உள்ளூராட்சி சபைகளில், ஐதேக, சிறிலங்கா சுதந்திரக் கட்சி, பொதுஜன முன்னணி போன்ற சிங்களப் பேரினவாதக் கட்சிகளுடனும், ஈபிடிபியுடனும் இணைந்து ஈபிஆர்எல்எவ் ஆட்சியமைக்க மேற்கொண்ட நடவடிக்கைகளால் அதிருப்தியடைந்து, தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டணியில் இருந்து ஜனநாயக தமிழ் அரசுக் கட்சி வெளியேறியுள்ளது.
சிறிலங்காவின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட அதிபர் பதவியை ஒழிக்கும் சட்டத் திருத்தத்துக்கு ஆதரவு அளிப்பதற்கு, மகிந்த ராஜபக்சவின் தலைமையிலான கூட்டு எதிரணி நிபந்தனை விதித்துள்ளது.
தமக்கு எதிராக கூட்டு எதிரணியினர் நம்பிக்கையில்லா பிரேரணையைக் கொண்டு வந்தால் அதனை எதிர்கொள்வதற்குத் தயார் என்று எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
2018 நிதி ஆண்டின் எஞ்சிய காலப்பகுதியில் சிறிலங்காவுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை வழங்குவதற்கு அமெரிக்க காங்கிரஸ் கடுமையான நிபந்தனைகளை விதித்துள்ளது.
வவுனியா வடக்கு பிரதேச சபையை ஐதேக மற்றும் சுயேட்சைக் குழுவின் ஆதரவுடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது. இன்று காலை நடந்த வவுனியா வடக்கு பிரதேச சபையின் அமர்வில் புதிய தவிசாளர் தெரிவு இடம்பெற்றது.
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் எவ்வாறு செயற்படப் போகிறார் என்பதைப் பொறுத்தே, அவருடன் இணைந்து போட்டியிடுவது குறித்து ஈபிஆர்எல்எவ் தீர்மானிக்கும் என்று அந்தக் கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
பிரித்தானியப் பிரதமர் தெரெசா மேயை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார். இந்தச் சந்திப்பின் போது, இரண்டு நாடுகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்கள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளது.
அமெரிக்காவின் பசுபிக் கட்டளைப் பீடத்தின் தரைப்படையை ( US Land Forces ) சேர்ந்த 17 அதிகாரிகளைக் கொண்ட குழு சிறிலங்கா வந்துள்ளது. தரைப்படைகள் பசுபிக் திட்ட அமர்வுகளில் பங்கேற்கவே இந்தக் குழு கொழும்பு வந்துள்ளது.