மேலும்

நாள்: 23rd April 2018

சிறிலங்காவில் கடலில் மூழ்கும் தீவு – பேரலைகள் தோன்றக் காரணம் என்ன?

சிறிலங்காவுக்கு அருகே தாழமுக்கம் ஒன்று உருவாகியுள்ளதாலேயே கடல் கொந்தளிப்பு ஏற்பட்டு, உயரமான அலைகள் தோன்றுவதாகவும், சுனாமி ஆபத்து ஏற்படாது என்றும் சிறிலங்கா வளிமண்டலவியல் திணைக்கள அதிகாரி தெரிவித்துள்ளார்.

உயர்மட்டப் பேச்சுக்களை நடத்த வாய்ப்புக் கிடைக்காமல் நாடு திரும்பும் சிறிலங்கா அதிபர்

கொமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்கச் சென்றிருந்த சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன முக்கிய நாடுகளின் உயர்மட்டத் தலைவர்களுடன் எந்த அதிகாரபூர்வ பேச்சுக்களையும் நடத்தாமலேயே நாடு திரும்பியுள்ளார்.

சிறிலங்கா அதிபரின் கொள்கை விளக்க உரை மீது வாக்கெடுப்பு நடக்காது

வரும் மே 8ஆம் நாள் சிறிலங்கா நாடாளுமன்றத்தின் அடுத்த அமர்வு ஆரம்பிக்கப்படும் போது, அதிபர் மைத்திரிபால சிறிசேன கொள்கை விளக்க உரையை நிகழ்த்துவார் என்றும், எனினும் அந்த உரை மீது விவாதமோ, வாக்கெடுப்போ நடத்தப்படாது என்றும் கூறப்படுகிறது.

அமைச்சர்களின் எண்ணிக்கையை 43 ஆக குறைக்குமாறு சிறிலங்கா அதிபர் அறிவுறுத்தல்

புதிதாக நியமிக்கப்படும் அமைச்சரவையில் அமைச்சர்களின் எண்ணிக்கையை 43 ஆக குறைக்குமாறு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன ஐக்கிய தேசியக் கட்சியிடம் கூறியுள்ளார் என்று கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பயிற்சி முகாமில் மயங்கிய 19 சிறிலங்கா படையினரில் இருவரின் நிலை கவலைக்கிடம்

வவுனியா- பம்பைமடு சிறிலங்கா இராணுவப் பயிற்சி முகாமில் நேற்று நண்பகல் திடீர் சுகவீனமடைந்த 19 படையினர் வவுனியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.