மேலும்

மாதம்: April 2018

முள்ளிவாய்க்கால் நினைவிடம் அமைக்கும் பணிகளை இடைநிறுத்தியது சிறிலங்கா அரசு

யாழ். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டு வந்த முள்ளிவாய்க்கால் நினைவிடத்துக்கான கட்டுமானப் பணிகள், சிறிலங்கா அரசாங்கத்தின் உத்தரவின் பேரில் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

ஊடக சுதந்திரம் – 10 இடங்கள் முன்னேறியது சிறிலங்கா

ஊடக சுதந்திரம் தொடர்பான தரப்படுத்தலில் சிறிலங்கா இந்த ஆண்டில் 10 இடங்கள் முன்னேறியுள்ளது. 2018ஆம் ஆண்டுக்கான ஊடக சுதந்திர சுட்டியை, பிரான்சை தலைமையகமாக கொண்ட எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பு வெளியிட்டுள்ளது.

ஐதேக முக்கிய பதவிகளில் மாற்றம் – கட்சிக்குள் குழப்பம் நீடிப்பு

ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய பதவிகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ள நிலையிலும், கட்சிக்குள் குழப்பங்கள் நீடிப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறிலங்கா ரூபா மதிப்பு வீழ்ச்சியை நியாயப்படுத்திய மத்திய வங்கி ஆளுனர்

அமெரிக்க டொலருக்கு எதிரான சிறிலங்கா ரூபாவின் மதிப்பு வீழ்ச்சி குறித்து கருத்து வெளியிட்டுள்ள சிறிலங்கா மத்திய வங்கி ஆளுனர் இந்திரஜித் குமாரசுவாமி,  ஏனைய பல நாடுகளிலும் இதே நிலையே இருப்பதாக, அலட்சியமாக பதிலளித்துள்ளார்.

இரா.சம்பந்தன் – ‘சேர் பொன். இராமநாதனின் மறுஉருவம்’

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவு வழங்கியமை மற்றும், சில வாரங்களுக்கு முன்னர் கூட்டு எதிர்க்கட்சியால் பிரதமருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை தோற்கடிப்பதற்கு ஆதரவளித்தமை தொடர்பில், எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான ஆர்.சம்பந்தன் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளார்.

காணாமல் போனோர் பணியக உறுப்பினர்களை வேண்டா வெறுப்பாக நியமித்த சிறிலங்கா அதிபர்

காணாமல் போனோர் பணியகத்தின் உறுப்பினர்கள் சிலரை வேண்டா வெறுப்பாகவே சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நியமித்துள்ளார் என்று அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்தார்.

தொடர்ந்து சரியும் சிறிலங்கா ரூபாவின் மதிப்பு – வெளிநாட்டு கடன்சுமை அதிகரிப்பு

அமெரிக்க டொலருக்கு எதிரான சிறிலங்கா ரூபாவின் மதிப்பு கடும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ள நிலையில், ஒரே வாரத்தில் சிறிலங்காவின் கடன்சுமை 47 பில்லியன் ரூபாவாவினால் அதிகரித்துள்ளது.

திருகோணமலையில் அமெரிக்காவின் பாரிய மிதக்கும் மருத்துவமனை

அமெரிக்க கடற்படையின் USNS Mercy என்ற பாரிய மிதக்கும் மருத்துவமனைக் கப்பல், நேற்று திருகோணமலைத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

நல்லிணக்கச் செயல்முறைகள் குறித்து சிறிலங்காவுடன் கனடா பேச்சு

சிறிலங்காவில் முன்னெடுக்கப்படும் நல்லிணக்கச் செயல்முறைகள் மற்றும் ஏனைய விவகாரங்கள் தொடர்பாக சிறிலங்காவுக்கும் கனடாவுக்கும் இடையில் பேச்சுக்கள் நடத்தப்பட்டுள்ளன.

தமிழ்தேசியம்: ‘தமிழ்நாட்டின் உரிமைகளை எப்போது மீட்க முடியும்?’

தமிழகத்தின் உரிமைகள் மறுக்கப்படுகின்றன என்ற குரல்கள் அதிகரிக்கும் போதெல்லாம், தமிழ் தேசியம் என்ற கோஷமும் ஓங்கி ஒலிப்பது பல்வேறு காலகட்டங்களில் நடந்துகொண்டிருக்கிறது. சமீபத்தில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி நடைபெற்ற போராட்டங்களின் தொடர்ச்சியாகவும் அத்தகைய கோஷங்கள் ஒலிக்கத் துவங்கின.