மேலும்

முள்ளிவாய்க்கால் நினைவிடம் அமைக்கும் பணிகளை இடைநிறுத்தியது சிறிலங்கா அரசு

யாழ். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டு வந்த முள்ளிவாய்க்கால் நினைவிடத்துக்கான கட்டுமானப் பணிகள், சிறிலங்கா அரசாங்கத்தின் உத்தரவின் பேரில் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

முள்ளிவாய்க்காலில் இறுதிக்கட்டப் போரில் உயிரிழந்த பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நினைவாக, யாழ். பல்கலைக்கழக வளாகத்தில்  நினைவிடம் ஒன்று அமைக்கும் பணிகள் மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டன.

யாழ். பல்கலைக்கழக நிர்வாகத்தின் வழிகாட்டலுடன் முன்னெடுக்கப்பட்டு வந்த கட்டுமானப் பணிகளை இடைநிறுத்துமாறு சிறிலங்காவின் உயர்கல்வி அமைச்சும், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவும், நேற்று முன்தினம் யாழ். பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு உத்தரவிட்டுள்ளன.

இதையடுத்து,  முள்ளிவாய்க்கால் நினைவிடத்தை அமைக்கும் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *