மேலும்

மாதம்: March 2018

சீனாவைக் குறிவைக்கும் இந்தியாவின் கூட்டுப் பயிற்சி – சிறிலங்கா போர்க்கப்பல்களும் விரைவு

இந்தியக் கடற்படையின் ஏற்பாட்டில் நடக்கவுள்ள மிலன்-2018 கடற்படைக் கூட்டுப் பயிற்சியில் பங்கேற்க, சிறிலங்கா கடற்படை இரண்டு போர்க்கப்பல்களை அனுப்பி வைத்துள்ளது.

காணாமல் ஆக்கப்பட்டவரின் மனைவியும் காணாமல் போனோர் பணியகத்தின் உறுப்பினராக நியமனம்

காணாமல் போனோர் பணியகத்தின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ள ஏழு பேரில், காணாமல் ஆக்கப்பட்ட ஒருவரின் மனைவியான ஜெயதீபா புண்ணியமூர்த்தியும் அடங்கியுள்ளார்.

மாலைதீவும் சிறிலங்காவும் – 2

மாலைதீவு அரசியலில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பு நிலை- பிராந்திய வல்லரசுகளுக்கிடையிலான நேரடி சொற்போர் என்பதற்கு அப்பால்,   சிறிலங்காவில் நடந்த உள்ளுராட்சி சபை தேர்தலின் முடிவுகளைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள நிலைமைகள், அரசியல் மாற்றத்துக்கு இட்டுச் செல்லுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

சிறிலங்காவின் சித்திரவதைகள் குறித்த புதிய ஆதாரங்களை வெளியிட்டது அல்-ஜெசீரா

சிறிலங்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு மூன்று ஆண்டுகள் கடந்த நிலையில் இன்னமும் அங்கு தமிழர்களுக்கு எதிரான சித்திரவதைகள் தொடர்வதாக அல்- ஜெசீரா தொலைக்காட்சி புதிய ஆதாரங்களை முன்வைத்துள்ளது.

சிறிலங்காவின் விசாரணை முடியும் வரை மேலதிக நடவடிக்கை இல்லை – பிரித்தானியா

பிரிகேடியர் பிரியங்க பெர்னோன்டோவுக்கு எதிரான விசாரணைகளை சிறிலங்கா அரசாங்கம் முடிக்கும் வரை, பிரித்தானியா மேலதிக நடவடிக்கைகளை எடுக்காது என்று கொழும்பில் உள்ள பிரித்தானிய தூதரகம் தெரிவித்துள்ளது.

ஐ.நாவின் சிறப்புத் தூதுவர் முகமாலைக்கு வருகிறார்

ஆட்களுக்கு எதிரான கண்ணிவெடிகளைத் தடை செய்யும் பிரகடனம் தொடர்பான ஐ.நாவின் சிறப்புத் தூதுவரான இளவரசர், மிரெட் ராட் செயிட் அல் ஹுசேன் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

எதிரணிக்குச் செல்கிறார் பிரதி அமைச்சர் புஞ்சிநிலமே

கூட்டு அரசாங்கத்தில் இருந்து விலகி, எதிரணியில் அமர்ந்து கொள்வதற்கு, பொது முகாமைத்துவ பிரதி அமைச்சர் சுசந்த புஞ்சிநிலமே, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம் அனுமதி கோரியுள்ளார்.

ஐதேக முக்கிய உறுப்பினர்கள் பலர் ரணிலுக்கு எதிரான பிரேரணையில் கையெழுத்து

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் பலர் கையெழுத்திட்டுள்ளனர் என்று கூட்டு எதிரணி தெரிவித்துள்ளது.

ஒரே ஆண்டில் கொழும்பு வந்த 65 வெளிநாட்டுப் போர்க்கப்பல்கள்

சிறிலங்காவில் சீன கடற்படைக் கப்பல்களின் பிரசன்னம் அதிகமாக இருப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டை சிறிலங்காவின் கூட்டுப்படைகளின் தளபதி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன நிராகரித்துள்ளார்.

மரைன் படைப்பிரிவை வேகமாகப் பலப்படுத்தும் சிறிலங்கா கடற்படை

சிறிலங்கா கடற்படையில் அண்மையில் புதிதாக உருவாக்கப்பட்ட மரைன் படைப்பிரிவு வேகமாக பலப்படுத்தப்பட்டு வருகிறது. குறுகிய காலத்துக்குள் மரைன் படைப்பிரிவின் மூன்றாவது அணி பயிற்சியை முடித்து வெளியேறியிருக்கிறது.