திடீரென இந்தியா புறப்பட்டுச் சென்றார் மகிந்த
சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச இன்று அதிகாலை இந்தியாவுக்கு திடீர் பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து அவர் இன்று அதிகாலை 4.45 மணியளவில் பெங்களூரு செல்லும், சிறிலங்கன் விமான சேவை விமானத்தில், பயணமானார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
மகிந்த ராஜபக்சவுடன், நாடாளுமன்ற உறுப்பினர் லொகான் ரத்வத்த, தனிப்பட்ட செயலர் உதித் லொக்குபண்டார உள்ளிட்ட ஆறு பேர் கொண்ட குழு பெங்களூருவுக்குப் பயணமாகியுள்ளது.
இன்றிரவு மகிந்த ராஜபக்ச கொழும்பு திரும்புவார் என்றும் கூறப்படுகிறது.
திருப்பதி ஏழுமலையான் ஆலயத்தில் வழிபாடு செய்வதற்காகவே மகிந்த ராஜபக்ச இந்தியா சென்றிருப்பதாக கூட்டு எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.