அரசியல் நெருக்கடி குறித்து நாடாளுமன்றத்தில் இன்று மாலை சிறப்பு விவாதம்
தற்போதைய அரசியல் நெருக்கடிகள் தொடர்பாக இன்று மாலை சிறிலங்கா நாடாளுமன்றத்தில் சிறப்பு விவாதம் நடத்தப்படவுள்ளது.
இன்று காலை 10 மணியளவில் நாடாளுமன்றம் கூடிய போது, தற்போதைய அரசியல் நெருக்கடிகள் தொடர்பாக இன்று சிறப்பு விவாதம் ஒன்றை நடத்த வேண்டும் என்று கூட்டு எதிரணியின் தலைவர் தினேஸ் குணவர்த்தன கோரிக்கை விடுத்தார்.
இதையடுத்து, நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டு கட்சித் தலைவர்களின் கூட்டத்தை சபாநாயகர் கூட்டி ஆலோசனை நடத்தினார்.
இந்தக் கூட்டத்தில், இன்று மாலை 4 மணி தொடக்கம் 7 மணிவரை சிறப்பு விவாதம் நடத்த இணக்கம் காணப்பட்டது.
இதனை சபாநாயகர் கரு ஜெயசூரிய நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.