மேலும்

புதிய அரசாங்கத்தை அமைக்கும் பேச்சுக்களில் இருந்து ஒதுங்கியது கூட்டமைப்பு

sumanthiran-sam-mavaiஉள்ளூராட்சித் தேர்தலுக்குப் பின்னர் கொழும்பு அரசியலில் புதிய அரசாங்கத்தை அமைப்பதற்காக நடக்கும் எந்தவொரு பேச்சுக்களிலும் பங்கேற்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விரும்பவில்லை என்று கூட்டமைப்பின் பேச்சாளரான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்குக் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

“பெப்ரவரி 10 தேர்தலுக்குப் பின்னர், அரசாங்கத்தை அமைப்பதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்களை வாங்கும் தற்போதைய சூழல் வெறுப்பை ஏற்படுத்துகிறது.

அரசாங்கத்தை அமைப்பதற்கான எந்தவொரு பேச்சுக்களிலும் பங்கேற்க கூட்டமைப்பு விரும்பவில்லை.

பெருமளவு பேச்சுக்களை நடந்து கொண்டிருப்பதை நாம் அறிவோம். என்ன நடக்கப் போகிறது என்று எமக்குத் தெளிவாகத் தெரியவில்லை.

எனவே, யாருக்கு ஆட்சியமைக்கும் ஆற்றல் உள்ளது என்பதை அறிய நாம் காத்திருப்போம். அதன் பின்னர் என்ன செய்வது என்று முடிவு செய்வோம்.” என்று கூறினார்.

ரணில் விக்கிரமசிங்கவுக்குப் பதிலாக கரு ஜெயசூரியவை பிரதமர் பதவிக்கு நியமித்தால், அந்த அரசாங்கத்தை ஆதரிக்க  கூட்டமைப்பு இணங்கியுள்ளதாக வெளியாகும் தகவல்கள் குறித்து கருத்து வெளியிட்ட சுமந்திரன், “ஜனநாயக மறுசீரமைப்பு, ஊழலுக்கு எதிரான நடவடிக்கை, யாராக இருந்தாலும், தண்டனையில் இருந்து தப்பிப்பதற்கு எதிரான கொள்கைகளுக்கு ஆதரவளிப்பவர்களுக்கு கூட்டமைப்பு ஆதரவு அளிக்கும்” என்று குறிப்பிட்டார்.

“எமது முடிவு கொள்கையின் அடிப்படையிலானதே தவிர, தனிநபர்களை அடிப்படையாகக் கொண்டது அல்ல.

இப்போது, எப்படி அரசாங்கம் அமைக்கப்படவுள்ளது என்பது பற்றியே மக்கள் பேசுகிறார்கள்.

கட்சி தாவல்களை மேற்கொள்வதற்காக பல முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. அத்தகைய செயற்பாடுகளில் ஈடுபட நாம் விரும்பவில்லை” என்றும் அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *