மேலும்

கரு ஜெயசூரியவும், சஜித் பிரேமதாசவும் பிரதமர் பதவியை நிராகரிப்பு

unpகூட்டு அரசாங்கத்துக்குள் எழுந்துள்ள குழப்பத்தை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில், சபாநாயகர் கரு ஜெயசூரியவை அல்லது, அமைச்சர் சஜித் பிரேமதாசவை பிரதமராக நியமிக்கும்படி முன்மொழியப்பட்ட யோசனையை அவர்கள் இருவரும் நிராகரித்துள்ளனர்.

ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையிலான அரசாங்கத்தில் அங்கம் வகிக்க முடியாது என்று சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூறி வருகின்றனர்.

இதனால், பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்கிரமசிங்க விலகி, சபாநாயகர் கரு ஜெயசூரியவை அல்லது வேறொரு மூத்த தலைவரை பிரதமராக நியமிக்கலாம் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன ஆலோசனை கூறியிருந்தார்.

பிரதமர் பதவிக்கு சஜித் பிரேமதாசவின் பெயரும் முன்மொழியப்பட்டது.

எனினும், கரு ஜெயசூரியவும், சஜித் பிரேமதாசவும், பிரதமர் பதவியை ஏற்றுக் கொள்ள மறுப்புத் தெரிவித்துள்ளனர்.

ஐதேகவின் முழுமையான அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்ளாமல் பிரதமர் பதவியை ஏற்றுக் கொள்ள முடியாது என்று அவர்கள் கூறிவிட்டதாக, கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *