மேலும்

சிறிலங்காவில் இந்தியப்படை அதிகாரிகளின் உயர்மட்டக் குழு

indian defence teamஇந்திய இராணுவ உயர் கட்டளை கற்கைநெறி அதிகாரிகள் குழுவொன்று சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளது. எயர் கொமடோர் சுரேஸ் ஹொல்லன்னாவர் தலைமையிலான இந்தக் குழுவின் இந்தியாவின் முப்படை அதிகாரிகளும் இடம்பெற்றுள்ளனர்.

இந்தக் குழுவினர் நேற்று சிறிலங்கா இராணுவத் தலைமை அதிகாரி மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகரவைச் சந்தித்து பேச்சு நடத்தினர்.

அத்துடன், சிறிலங்கா விமானப்படை, கடற்படைத் தளபதிகளையும் இந்திய அதிகாரிகள் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளனர்.

இந்தியப் படை அதிகாரிகள் பத்தரமுல்லையில் உள்ள இந்திய அமைதிப்படையினருக்கான நினைவுத் தூபியில் அஞ்சலி செலுத்தினர்.

indian defence team

இருதரப்பு இராணுவ ஒத்துழைப்பு, மற்றும் பல்வேறு விவகாரங்கள் தொடர்பான கலந்துரையாடுவதற்காக இந்திய படை அதிகாரிகள் குழு கொழும்பு வந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *