சுரேஷ் சாலே கைதுக்கு எதிரான மனுவை 6 மாதங்களுக்குப் பின் விசாரிக்க முடிவு
ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பாக, அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சாலே கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டுள்ளதை சவாலுக்குட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் மனுவை, 6 மாதங்களுக்குப் பின் உயர்நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவுள்ளது.

