மேலும்

இந்தியா வழங்கிய ஆழ்கடல் ரோந்துக் கப்பல் கொழும்பு வந்தது

varuna-arraive colomboஇந்திய அரசாங்கத்தினால் சிறிலங்கா கடற்படைக்கு வழங்கப்பட்ட, ஆழ்கடல் ரோந்துக் கப்பல், இன்று கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்தது.

சிறிலங்கா கடற்படையின் நடவடிக்கை ஆற்றலை விரிவுபடுத்துவதற்காக இந்திய கடலோரக் காவல்படையின் பயன்பாட்டில் இருந்து விடுவிக்கப்பட்ட, வருண என்ற ஆழ்கடல் ரோந்துக் கப்பலை, இந்தியா வழங்கியிருந்தது.

கொச்சி துறைமுகத்தில் கடந்த 5ஆம் நாள் நடந்த  நடந்த நிகழ்வில், சிலங்காவிடம் கையளிக்கப்பட்ட இந்த ஆழ்கடல் ரோந்துக் கப்பல் இன்று காலை கொழும்புத் துறைமுகத்துக்கு எடுத்து வரப்பட்டது.

varuna-arraive colombo

கப்டன்  நெவில் உபேசிறி தலைமையில், 10 அதிகாரிகள் மற்றும் 98 மாலுமிகள் இந்தக் கப்பலை கொழும்புக்கு கொண்டு வந்தனர். இதற்கு கொழும்பு துறைமுகத்தில் சிறிலங்கா கடற்படையினர் வரவேற்பு அளித்தனர்.

இந்தக் கப்பல், CG 60 என்று பெயரிடப்பட்டு, சிறிலங்கா கடலோரக் காவல்படையில் இணைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *