மேலும்

சிறிலங்கா அதிபருடன் பேசவுள்ளாராம் ஜெனரல் ஜயசூரிய

general jegath-jeyasooryaதனக்கு எதிராக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா சுமத்தியுள்ள போர்க்குற்றச்சாட்டு தொடர்பாக, முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஜெகத் ஜயசூரிய சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துப் பேசவுள்ளார்.

கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றிடம் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

“இந்த விவகாரம் தொடர்பாக, சிறிலங்கா அதிபருக்கு நேற்றுமுன்தினம் தகவல் தெரிவித்தேன்.

சரத் பொன்சேகா சுமத்தியுள்ள குற்றச்சாட்டு தொடர்பாக விவாதிப்பதற்கு நேரம் ஒதுக்கித் தருவதாக சிறிலங்கா அதிபர் எனக்கு வாக்குறுதி அளித்துள்ளார்.

சரத் பொன்சேகாவின் அறிக்கைக்கு எதிராக நான் எந்த அறிக்கையையும் வெளியிடப் போவதில்லை” என்றும் ஜெனரல் ஜெகத் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *