மேலும்

Tag Archives: ஜெனரல் ஜெகத் ஜயசூரிய

போர்க்குற்ற ஆதாரங்களை சரத் பொன்சேகா நீதிமன்றில் வெளியிட வேண்டும் – இரா.சம்பந்தன்

சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஜெகத் ஜயசூரிய இறுதிப் போரில் குற்றங்களை இழைத்தார் என்று குற்றம்சாட்டியுள்ள பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, அதற்கான ஆதாரங்களை நீதிமன்றத்தில் வெளியிட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா அதிபருடன் பேசவுள்ளாராம் ஜெனரல் ஜயசூரிய

தனக்கு எதிராக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா சுமத்தியுள்ள போர்க்குற்றச்சாட்டு தொடர்பாக, முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஜெகத் ஜயசூரிய சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துப் பேசவுள்ளார்.

பொன்சேகாவை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் – வீரவன்ச போர்க்கொடி

முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஜெகத் ஜயசூரிய மீது அபாண்டமான குற்றச்சாட்டுகளை சுமத்திய, அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை, அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச கோரிக்கை விடுத்துள்ளார்.

போர்க்குற்றச்சாட்டுகளுக்கு பொன்சேகாவே பொறுப்பு – ஜெனரல் ஜயசூரிய

போர்க்குற்றச்சாட்டுகளுக்கு சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவே பொறுப்புக் கூற வேண்டும் என்று சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஜெகத் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

பிரேசில் போர்க்குற்ற வழக்கை உன்னிப்பாக கவனிக்குமாறு சிறிலங்கா அதிபர் உத்தரவு

சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஜெகத் ஜயசூரியவுக்கு எதிராக பிரேசிலில் தொடரப்பட்டுள்ள போர்க்குற்ற வழக்கு தொடர்பான விவகாரத்தை உன்னிப்பாக கவனிக்குமாறு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தாம் உத்தரவிடப் போவதாக  சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

போர்க்குற்ற வழக்கை எதிர்கொண்டுள்ள ஜெனரல் ஜெகத் ஜயசூரிய எங்கே?

பிரேசில், கொலம்பியா ஆகிய நாடுகளில் போர்க்குற்ற வழக்குகளை எதிர்கொண்டுள்ள சிறிலங்கா தூதுவர் ஜெனரல் ஜெகத் ஜயசூரிய, பிரேசிலை விட்டு வெளியேறி விட்டதாக, ஏபி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.