மேலும்

நாரஹேன்பிட்டி விகாரையில் அரசியல் செயற்பாடுகளுக்கு நீதிமன்றம் தடைவிதிப்பு

gavelநாரஹேன்பிட்டி அபயராம விகாரையில் அரசியல் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் நேற்று இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

அபயராம விகாரையில் அரசியல் செயற்பாடுகளுக்குத் தடைவிதிக்கக் கோரி, தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த பின்னரே, இந்த தடை உத்தரவை கொழும்பு மாவட்ட நீதிமன்றம் பிறப்பித்தது.

கடந்த 2015ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் தோல்வியடைந்த பின்னர், முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச அபயராம விகாரையில் இருந்தே தனது அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுத்து வந்தார்.

தமது அணி உறுப்பினர்களைச் சந்திப்பது, கூட்டங்கள் செய்தியாளர் சந்திப்புகளை நடத்துவதற்கு அவர் இந்த விகாரையையே பயன்படுத்தினார்.

இதையடுத்தே, இங்கு அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தடை விதிக்கக் கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *