சிறிலங்கா அதிபரின் நிரந்தரச் செயலராக ஒஸ்ரின் பெர்னான்டோ நியமனம்
சிறிலங்கா அதிபரின் நிரந்தரச் செயலராக, சிறிலங்காவின் மூத்த நிர்வாக சேவை அதிகாரியான ஒஸ்ரின் பெர்னான்டோ நியமிக்கப்பட்டுள்ளார்.
2017 ஜூலை 1ஆம் நாள் தொடக்கம் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த நியமனம், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால் வழங்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் ஒஸ்ரின் பெர்னான்டோ இன்று அல்லது நாளை தனது கடமைகளைப் பொறுப்பேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.