மேலும்

எடப்பாடி பழனிச்சாமியை ஆட்சியமைக்க ஆளுனர் அழைப்பு – முதல்வராக இன்று பதவியேற்கிறார்

palanisamyதமிழ்நாட்டில், புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு அதிமுகவின் சட்டமன்றக் குழுத் தலைவராக தெரிவு செய்யப்பட்ட எடபபாடி பழனிச்சாமிக்கு ஆளுனர் அழைப்பு விடுத்துள்ளார்.

தமிழ்நாடு ஆளுனர் வித்தியாசகர் ராவுடன், எடப்பாடி பழனிச்சாமி இன்று முற்பகல் நடத்திய சந்திப்பின் போதே இதற்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, தமிழ்நாட்டின் 21 ஆவது முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்கவுள்ளார்.

இன்று  மாலை 4.30 மணியளவில், ஆளுனர் மாளிகையில் நடைபெறும் நிகழ்வில், தமிழ்நாடு ஆளுனர் வித்தியாசாகர் ராவ் முன்பாக அவர் முதலமைச்சராகப் பதவியேற்கவுள்ளார். அவருடன் அமைச்சர்களும் பதவியேற்கவுள்ளனர்.

சட்டப்பேரவையில் 15 நாட்களுக்குள், பெரும்பான்மை பலத்தை நிரூபிக்குமாறும் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆளுனர் அறிவுறுத்தியுள்ளார்.

ஆளுனரின் இந்த அழைப்பு தமிழ்நாட்டின் முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் தரப்பினருக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியிருப்பதாக கருதப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *