இந்திய வெளிவிவகாரச் செயலர் ஜெய்சங்கர் விரைவில் கொழும்புக்கு பயணம்
இந்திய வெளிவிவகாரச் செயலர் எஸ்.ஜெய்சங்கர் விரைவில் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். புதுடெல்லியில் உள்ள இந்திய வெளிவிவகார அமைச்சு அதிகாரிகள் இந்த தகவலை வெளியிட்டுள்ளனர்.
அடுத்த சில வாரங்களில் இந்திய வெளிவிவகாரச் செயலர் எஸ்.ஜெய்சங்கர், சீனா, சிறிலங்கா, பங்களாதேசுக்கான பயணங்களை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளார்.
இந்திய- சிறிலங்கா உறவுகளை மேலும் வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டே இவரது பயணம் அமைந்திருக்கும் என்று எக்கனமிக் ரைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
சிறிலங்காவில் அம்பாந்தோட்டை துறைமுகம், 15 ஆயிரம் ஏக்கரில் கைத்தொழில் வலயம் என, முக்கியமான திட்டங்களில் சீனா முதலீடுகளை மேற்கொள்ளுகின்ற நிலையிலேயே, இந்திய வெளிவிவகாரச் செயலரின் இந்தப் பயணம் இடம்பெறவுள்ளதாகவும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.