மேலும்

அம்பாந்தோட்டை முதலீடுகளை தாமதிக்க சீனா முடிவு- சிக்கலில் சிறிலங்கா

Chinese_flagசட்ட மற்றும் அரசியல் ரீதியான தடைகளை சிறிலங்கா அரசாங்கம் நீக்கும் வரைக்கும், அம்பாந்தோட்டை துறைமுகத் திட்டத்தில் 1.1 பில்லியன் டொலரை முதலீடு செய்யும் திட்டத்தை தாமதிப்பதற்கு சீனா முடிவு செய்துள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த திட்டம் தொடர்பான பேச்சுக்களில் தொடர்புடையவர்களை ஆதாரம்காட்டி இந்தச் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

பெரியளவில் கடனாளியாகியுள்ள சிறிலங்காவுக்கு நிதி தேவைப்படுகிறது. ஆனால், அம்பாந்தோட்டைத் துறைமுகத்தில் சீனாவின் நலன்களுக்கான கொடுப்பனவு சில வாரங்கள், அல்லது மாதங்களுக்கு தாமதிக்கப்படக் கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த டிசெம்பர் மாதம் சீன அரசின் மேர்ச்சர்ன்ட்ஸ் போட் ஹோல்டிங் நிறுவனத்துடன் ஒரு உடன்பாடு கையெழுத்திடப்பட்டதை அடுத்து, ஜனவரி 7ஆம் நாளுக்குள் துறைமுகத்தின் 80 வீத பங்குகளை வாங்குவதாக இணக்கம் காணப்பட்டிருந்தது.

இந்தப் பகுதியில் 15 ஆயிரம் ஏக்கரில் கைத்தொழில் வலயம் ஒன்றை உருவாக்க கொழும்புடன் சீனா இணங்கியிருந்தது. இதுபற்றிய உடன்பாடு பின்னர் இறுதி செய்யப்படும் என்று சிறிலங்கா நம்பியது.

ஆனால் கைத்தொழில் வலயத்துக்கு காணிகளை விற்பதாக கூறி, உள்ளூரில் போராட்டங்கள் எழுந்துள்ளதுடன், முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவும் இதற்கு கடும் எதிர்ப்பு வெளியிட்டு வருகிறார்.

மகிந்தவுக்கு ஆதுரவான நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இதற்கு எதிராக நீதிமன்றத்துக்கும் சென்றுள்ளார்.

இந்த நிலையில்  அம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் கைத்தொழில் வலய திட்டம் ஆகியவற்றை ஒன்றிணைத்து, உடன்பாட்டைச் செய்து கொள்ளலாம் என்றும், உள்நாட்டு விவகாரங்களைத் தீர்த்துக் கொள்ளும் வரையில் இதனை நிறுத்தி வைப்பதென்னும் சீனா முடிவு செய்துள்ளது.

துறைமுகத்தை ஆரம்பிக்கும் போது, காணியும் தேவை என்று சீனா கோரியுள்ளது, ஆனால் அதற்கான சீனா நிபந்தனை விதிக்கவில்லை என்று சிறிலங்கா நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஆனால், இந்த இரண்டு உடன்பாடுகளும் தொடர்புடையவை என்று சிறிலங்காவுக்கான சீனத் தூதுவர் யி ஷியான்லியாங் கூறியுள்ளார்.

கைத்தொழில் வலயம் இல்லாமல் துறைமுகத்தை வைத்திருந்து என்ன பயன்,? எனவே, இரண்டுமே தேவை என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்த நிலையில், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வரும் மே மாதம் பீஜிங்  பயணம் மேற்கொள்ளும் வரை காத்திருக்க சீனா முடிவு செய்திருப்பதாக, சீனத் தரப்புடன் தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவித்தன.

எனினும், இதுகுறித்து சீன வெளிவிவகார அமைச்சு பதிலளிக்க மறுத்து விட்டது.

அதேவேளை, அம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் கைத்தொழில் வலயத் திட்டத்துக்கு எதிராக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு வரும் மார்ச் 3ஆம் நாள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

நீதிமன்றத் தீர்ப்பு வெளியாகும் வரை இந்த திட்டம் தாமதிக்கப்படுமா என்று எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த சீனத் தூதுவர், ஆமாம், நாம் சட்டத்தின் ஆட்சியைப் பின்பற்றுகிறோம். நாம் பொறுமையுடன் காத்திருக்க வேண்டும்.என்று குறிப்பிட்டார்.

சீனா தாமதிக்க எடுத்துள்ள முடிவினால் சிறிலங்காவுக்கு பொருளாதார ரீதியாக பாரிய அழுத்தங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் ரொய்ட்டர்ஸ் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *