மேலும்

பலாலி ஓடுபாதை விரிவாக்க ஆவணத்தில் ஒப்பமிடவில்லை – விக்னேஸ்வரன்

Palaly_Airportபலாலி விமான நிலைய ஓடுபாதையை விரிவாக்குவது தொடர்பான எந்தவொரு ஆவணத்திலும் தான் ஒப்பமிடப் போவதில்லை என்று வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கடந்த வியாழக்கிழமை நடந்த வடக்கு மாகாணசபையின் அமர்விலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு மாகாணசபையின் பெரும்பான்மை உறுப்பினர்களின் அனுமதியைப் பெற்றுக் கொள்ளாமல் பலாலி விமான நிலைய விரிவாக்கம் தொடர்பான திட்டத்துக்கு தாம் ஒப்புதல் அளிக்கமாட்டேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

பலாலி விமான நிலைய ஓடுபாதையை விரிவாக்குவதற்காக மேலும் 1600 ஏக்கர் நிலத்தை நிரந்தரமாக கைப்பற்றும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக, வட மாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் உரையாற்றிய போது தெரிவித்திருந்தார்.

இதற்குப் பதிலளித்து உரையாற்றிய போதே வடக்கு மாகாண முதலமைச்சர் மேற்படி கருத்தை வெளியிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *