மேலும்

காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் வவுனியாவில் காலவரையற்ற உண்ணாவிரதம்

missing-relatives-fasting (1)சிறிலங்கா படையினரிடம் கையளிக்கப்பட்டும், கடத்தப்பட்டும், கைது செய்யப்பட்டும் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் வவுனியாவில் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

நேற்றுக்காலை ஆலய வழிபாடுகளை மேற்கொண்ட பின்னர், ஏ-9 வீதியில் அமைந்துள்ள அஞ்சலகம் முன்பாக உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

காணாமலாக்கப்பட்ட தமது உறவுகளின் நிலை தொடர்பாக, சிறிலங்கா அரசாங்கம் உரிய பதிலை அளிக்கும் வரை தமது போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை என்று, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

missing-relatives-fasting (1)missing-relatives-fasting (2)

சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமக்கு ஏதேனும் நேர்ந்தால், சிறிலங்கா அதிபர், பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரே அதற்குப் பொறுப்பு என்றும் போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, வவுனியாவில் நடத்தப்படும் இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள், திருகோணமலையில் நேற்று அடையாள உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *