மேலும்

சிறிலங்கா- அமெரிக்க கடற்படைகளுக்கு இடையிலான கூட்டு வலுப்பெற்றுள்ளது – அமெரிக்க தூதுவர்

atul-keshapஅமெரிக்க கடற்படையின் ஏவுகணை நாசகாரி போர்க்கப்பலான யுஎஸ்எஸ் ஹொப்பரின் கொழும்பு பயணத்தின் மூலம், சிறிலங்கா- அமெரிக்க கடற்படைகளுக்கு இடையிலான கூட்டு மேலும் வலுப்படுத்தப்பட்டுள்ளதாக சிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா- அமெரிக்க கடற்படைகளுக்கு இடையிலான வலுவான மற்றும் பரஸ்பரம் நன்மையளிக்கும், கூட்டு  யுஎஸ்எஸ் ஹொப்பரின் கொழும்பு பயணத்தின் மூலம், மேலும் வலுப்படுத்தப்பட்டுள்ளது.

கடல்சார் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு சிறிலங்கா கடற்படை பங்காளராக இணைந்து கொண்டுள்ளதை அமெரிக்கா மதிக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

யுஎஸ்எஸ் ஹொப்பர் நாசகாரி கொழும்புத் துறைமுகத்தில் தரித்து நின்று சிறிலங்கா கடற்படையினருடன் இணைந்து மேற்கொண்டுள்ள பயிற்சிகள் தொடர்பாக கீச்சகத்தில் இட்டுள்ள பதிவுகளிலேயே அமெரிக்கத் தூதுவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *