ரவிராஜ் படுகொலை வழக்கு தீர்ப்புக்கு எதிரான மேல்முறையீட்டு மனு தள்ளுபடி
நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் படுகொலை வழக்கில் கொழும்பில் மேல் நீதிமன்றத்தினால் அளிக்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்த மனு இன்று கொழும்பு மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, முறைப்பாட்டாளர்கள் சமூகமளித்திருக்கவில்லை. இதையடுத்து, மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்த மனுவை பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் சசிகலா ரவிராஜ் தாக்கல் செய்திருந்தார்.
அதேவேளை, இந்த வழக்கில் ஜூரிகள் சபையின் முடிவுக்கு அமைய கொழும்பு நீதிமன்றம், சந்தேகநபர்களை விடுவித்து அளித்த தீர்ப்புக்கு எதிராக, சட்டமா அதிபர் சார்பிலும் மேல்முறையீட்டு மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.