மேலும்

ஊறணியில் 400 மீற்றர் கடற்கரைப் பகுதியில் மீன்பிடிக்க அனுமதி

oorani-boats (1)வலிகாமம் வடக்கில், காங்கேசன்துறைக்கும் மயிலிட்டிக்கும் இடைப்பட்ட பகுதியில் உள்ள ஊறணி பகுதியில் உள்ள 400 மீற்றர் நீளமான கடற்கரைப் பகுதியை, மட்டுப்படுத்தப்பட்டளவில் மீனவர்கள் பயன்படுத்த சிறிலங்கா படையினர், நேற்று அனுமதி அளித்துள்ளனர்.

இடம்பெயர்ந்து மாவிட்டபுரம்- நல்லிணக்க புரம் பகுதியில் குடியமர்த்தப்பட்டுள்ள 130 குடும்பங்களின் வாழ்வாதாரத்துக்காக, ஊறணிப் பகுதியில் இருந்து கடற்றொழிலை மேற்கொள்வதற்கு வசதியாகவே, 400 மீற்றர் கடற்கரைப் பகுதியை சிறிலங்கா படையினர் விடுவித்துள்ளனர்.

விடுவிக்கப்பட்ட ஊறணி கடற்கரைப் பகுதியைச் சுற்றிய பகுதிகள் முழுவதும் இராணுவக் கட்டுப்பாட்டிலேயே இருக்கின்றன. அங்கு 400 மீற்றர் கடற்கரைப் பகுதி மாத்திரம், முள்வேலிகள் அகற்றப்பட்டு, மீனவர்கள் சென்று வருவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பகுதியை மீன்பிடி நடவடிக்கைகள் தவிர வேறெந்த நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்த முடியாது. அத்துடன், இதற்கு அண்டிய பகுதியில் தங்கியிருக்கவும் முடியாது.

oorani-boats (1)oorani-boats (2)

தற்போது திறந்து விடப்பட்ட 400 மீற்றர் நீள கடற்கரைப் பகுதியில் எந்தப் படகுத்துறைகளோ, மீன்பிடிப் படகுகளை நிறுத்துவதற்கான வசதிகளோ இல்லை.

மயிலிட்டிப் பிரதேசத்தில் உள்ள மீன்பிடித் துறைமுகம் மற்றும் படகுத் துறைகள் இன்னமும் இராணுவக் கட்டுப்பாட்டிலேயே இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

அதேவேளை, நல்லிணக்கபுரத்தில் மீளக் குடியமர்த்தப்பட்டுள்ள 130 குடும்பங்களில், மீன்பிடித் தொழிலை மேற்கொள்ளும் குடும்பங்கள் மிகச் சிலவே என்றும் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *