மேலும்

அம்பாந்தோட்டை விவகாரம் – மகிந்தவைச் சந்தித்து விளக்கம் கோரினார் சீனத் தூதுவர்

yi-meet-mahindaஅம்பாந்தோட்டை துறைமுக விவகாரத்தில் சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்து வரும் எதிர்ப்புத் தொடர்பாக சீனா அவரிடம் விளக்கம் கோரியுள்ளது.

சிறிலங்காவுக்கான சீனத் தூதுவர் யி ஷியான்லியாங் இன்று மகிந்த ராஜபக்சவை அவரது அதிகாரபூர்வ வதிவிடத்தில், சந்தித்துப் பேசினார்.

இதன் போது. அம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும், காணிகள் ஒதுக்கீட்டுக்கு மகிந்த ராஜபக்ச எதிர்ப்புத் தெரிவித்து வருவதற்கான காரணங்கள் குறித்து மகிந்த ராஜபக்சவிடம் சீனத் தூதுவர் விளக்கம் கோரினார்.

yi-meet-mahinda

அதற்கு, அம்பாந்தோட்டையில் 15 ஆயிரம் ஏக்கர் காணிகளை வெளிநாடு ஒன்றுக்கு வழங்கும் திட்டத்தை கூட்டு எதிரணியினால் ஏற்றுக் கொள்ள முடியாது என்று மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளதாக, அவரது செயலகம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *