விமல் வீரவன்ச கைது
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினால் சற்று முன்னர் கைது செய்யப்பட்டார்.
முன்னைய அரசாங்கத்தில் அமைச்சராக இருந்த போது, அரசாங்க வாகனங்களை தவறாகப் பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே விமல் வீரவன்ச கைது செய்யப்பட்டுள்ளார்.
நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவில் இன்று விசாரணைக்காக அழைக்கப்பட்டிருந்த அவரிடம், வாக்கு மூலம் பெறப்பட்ட பின்னர், கைது செய்யப்பட்டார்.
இவரை நீதிமன்றத்தில் முன்னிறுத்துவதற்கான ஏற்பாடுகளை நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டுள்ளனர்.