மேலும்

கூட்டு எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் 10 பேர் விரைவில் கைது

hambantota-clash-1அம்பாந்தோட்டையில் நீதிமன்றத்தின் தடையை மீறி, நேற்றுமுன்தினம் ஆர்ப்பாட்டம் நடத்திய கூட்டு எதிரணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் பத்துப் பேர் அடுத்த சில நாட்களுக்குள் கைது செய்யப்படவுள்ளனர்.

மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

“ஆர்ப்பாட்டப் பேரணியில் பங்கேற்றதன் மூலம் கூட்டு எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நீதிமன்ற உத்தரவை மீறியுள்ளனர்.

பேரணியின் போது எடுக்கப்பட்ட காணொளிப் பதிவை வைத்து, அதில் பங்கேற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களை சிறப்பு காவல்துறைக் குழு அடையாளம் கண்டுள்ளது.

வன்முறையைத் தூண்டி விட்ட சில நாடாளுமன்ற உறுப்பினர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே பலர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களிடம்விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்களும், உள்ளூராட்சித் தலைவர்களுமேயாவர்” என்றும் அந்த காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *