ஆப்கானுக்கான சிறிலங்கா தூதுவராக முன்னாள் விமானப்படைத் தளபதி
ஆப்கானிஸ்தானுக்கான சிறிலங்கா தூதுவராக, சிறிலங்கா விமானப்படையின் முன்னாள் தளபதி எயர் சீவ் மார்ஷல் ககன் புலத்சிங்கள நியமிக்கப்படவுள்ளார்.
அண்மையில் சிறிலங்கா விமானப்படைத் தளபதி பதவியில் ஓய்வு பெற்ற எயர் சீவ் மார்ஷல் ககன் புலத்சிங்களவை ஆப்கானிஸ்தானுக்கான தூதுவராக நியமிப்பதற்கு சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
அவரது பெயர் இந்தப் பதவிக்கு முன்மொழியப்பட்டுள்ள நிலையில், உயர்நிலைப் பதவிகளுக்கான நாடாளுமன்றத் தெரிவுக் குழுவின் முன்பாக இவர் முன்னிலையாவார்.
நாடாளுமன்றத் தெரிவுக் குழு இவரை இந்தப் பதவிக்குப் பொருத்தமானவர் என்று ஏற்றுக்கொள்ளும் நிலையில், ஆப்கானிஸ்தானுக்கான தூதுவராக எயர் சீவ் மார்ஷல் ககன் புலத்சிங்கள நியமிக்கப்படுவார்.