மேலும்

பீரிஸ் தலைமையில் உருவாகிறது சிறிலங்கா பொதுஜன முன்னணி

g.l.peirisமகிந்த ராஜபக்ச ஆதரவு கூட்டு எதிரணியில் உள்ள, சிறிலங்காவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தலைமையில் புதிய கட்சியைப் பதிவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

விமல் கீகனகே தலைமையில் இயங்கிய எமது சிறிலங்கா சுதந்திர முன்னணி என்ற பெயரில் இயங்கிய கட்சி, சிறிலங்கா பொதுஜன முன்னணி என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதன் தலைவராக, பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் பெயரிடப்பட்டுள்ளார். புதிய கட்சியின் பெயர் பதிவுகளுக்காக தேர்தல்கள் ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கட்சி தாமரை மொட்டு சின்னத்தை தமக்கு வழங்குமாறும் கோரியுள்ளது.

மகிந்த ராஜபக்சவின் பிறந்த நாளான வரும் நொவம்பர் 18ஆம் நாள் கூட்டு எதிரணி புதிய கட்சியை ஆரம்பிக்கப் போவதாக செய்திகள் வெளியாகி வரும் நிலையிலேயே, பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தலைமையில் புதிய கட்சியைப் பதிவு செய்யும் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *