கொழும்புத் துறைமுகத்தில் ஜப்பானியப் போர்க்கப்பல்கள்
ஜப்பானியக் கடற்படையின் இரண்டு போர்க்கப்பல்கள் இன்று கொழும்புத் துறைமுகத்துக்கு நல்லெண்ணப் பயணமாக வந்துள்ளன. இனாசுமா, சுசுற்சுகி ஆகிய பெயர்களைக் கொண்ட ஜப்பானியப் போர்க்கப்பல்களே கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளன.
நாளை வரை இந்தப் போர்க்கப்பல்கள் கொழும்பில் தரித்து நிற்கவுள்ளன. இதன் போது சிறிலங்கா கடற்படையுடன் இணைந்து ஜப்பானியக் கடற்படையின் பயிற்சியில் ஈடுபடவுள்ளனர்.
ஏடன் வளைகுடாவில் சரக்குக் கப்பல்களுக்கான பாதுகாப்பில் ஈடுபடும் ஜப்பானியப் போர்க்கப்பல்கள், விநியோகத் தேவைக்காக கொழும்புத் துறைமுகத்துக்கு அடிக்கடி வந்து செல்வது குறிப்பிடத்தக்கது.