சாம்பல்தீவில் மீண்டும் குடியேறினார் புத்தர் – படங்கள்
திருகோணமலை- சாம்பல்தீவு சந்தியில், சிறிலங்கா படையினரால் கைவிடப்பட்ட இராணுவ முகாம் பகுதியில் நேற்று மீண்டும் புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளது.
பௌத்த பிக்குகளுடன் வந்த சிங்களவர்கள், அவசரஅவசரமாக அந்தப் பகுதியில் செங்கற்களைக் கொண்டு அமைத்த பீடம் ஒன்றில், புத்தர் சிலை ஒன்று வைக்கப்பட்டு வழிபாடுகளும் நடத்தப்பட்டன.
அந்தப் பகுதியில் பௌத்த கொடிகளும் பறக்கவிடப்பட்டுள்ளன. மீண்டும் புத்தர் சிலை வைக்கப்பட்டு வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதால், சாம்பல்தீவு மக்களிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
படங்கள் – நாதன்