மேலும்

வித்தியா கொலையை விசாரிக்க யாழ்ப்பாணத்தில் மூன்று நீதிபதிகளைக் கொண்ட மேல்நீதிமன்றம்

punkuduthivu-vithyaபுங்குடுதீவு மாணவி வித்தியா சிவலோகநாதன், கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கை விசாரிப்பதற்கு, யாழ். மேல் நீதிமன்றத்தில் மூன்று நீதிபதிகளைக் கொண்ட அமர்வு ஒன்றை அமைக்க சிறிலங்கா அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

கடந்த ஆண்டு இடம்பெற்ற இந்த கூட்டு வன்புணர்வுக் கொலை பெரும் பரபரப்பையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியிருந்தது.

இந்த வழக்குத் தொடர்பான விசாரணைகளை முடித்துள்ள குற்றப் புலனாய்வுப் பிரிவினர், மேலதிக சட்ட நடவடிக்கைக்காக ஆவணங்களை சட்டமா அதிபரிடம் கையளித்துள்ளனர்.

யாழ். மேல் நீதிமன்றத்தில் ஒரே ஒரு நீதிபதியே பணியாற்றுகின்ற நிலையில், இந்த வழக்கின் முக்கியத்துவம் கருதி, மூன்று நீதிபதிகளைக் கொண்ட மேல் நீதிமன்ற அமர்வு ஒன்றை உருவாக்க சிறிலங்கா அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

யாழ்ப்பாணத்தில், வழக்கு ஒன்று மூன்று மேல்நீதிமன்ற நீதிபதிகளைக் கொண்ட அமர்வினால் விசாரிக்கப்படவுள்ளமை இதுவே முதல்முறை என்றும் தகவல்கள் கூறுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *