மேலும்

சிறிலங்கா அதிபரின் பெயர் பொறித்த நினைவுக்கல்லை அடித்து நொருக்கினார் விகாராதிபதி

mangalaramaya (1)மட்டக்களப்பு மங்களராமய விகாரைக்கு வர மறுத்த சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன மீது கொண்ட கோபத்தினால், அந்த விகாரையில் இருந்த சிறிலங்கா அதிபரின் பெயர் பொறித்த நினைவுக் கல்லை அடித்து நொருக்கி ஆத்திரத்தை தீர்த்துக் கொண்டார் விகாராதிபதி.

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்று மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகளிலும் பங்கேற்றிருந்தார்.

அவரைத் தனது விகாரைக்கும் வருமாறு மட்டக்களப்பு மங்களராமய விகாரையின் விகாராதிபதி வண.அம்பிட்டியே சுமணரத்ன தேரர் அழைப்பு விடுத்தார்.

mangalaramaya (1)mangalaramaya (2)

ஆனால் நேரமில்லை என்று சிறிலங்கா அதிபர் அந்த அழைப்பை நிராகரித்து விட்டார்.

இதனால் ஆத்திரம் கொண்ட விகாராதிபதி, தனது விகாரையில் இருந்த, ஏற்கனவே சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால் திறந்து வைக்கப்பட்ட நினைவுக்கல் ஒன்றை அடித்து நொருங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *