மேலும்

பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவது குறித்து சுஸ்மாவுடன் பேசினார் மலிக் சமரவிக்கிரம

India-srilanka-Flagபுதுடெல்லிக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்காவின் அனைத்துலக வர்த்தக மற்றும் மூலோபாய அபிவிருத்தி அமைச்சர் மலிக் சமரவிக்கிரம, இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

புதுடெல்லியில் நேற்று நடந்த இந்தச் சந்திப்பில் இந்திய- சிறிலங்கா பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பாக ஆராயப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவுடன் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு உடன்பாட்டைச் செய்து கொள்வது தொடர்பான பேச்சுக்களை நடத்தவே சிறிலங்கா அமைச்சர் மலிக் சமரவிக்கிரம, புதுடெல்லி சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

sushma-malik

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *