மேலும்

அமைச்சர்களை சிறைக்கூண்டுக்குள் அடைத்தார் சிறிலங்கா அதிபர்

maithri-prision (1)புதிதாகத் திறந்து வைத்த மாத்தறை மாவட்ட மதுவரித் திணைக்கள கண்காணிப்பாளர் பணியகத்தில், சந்தேக நபர்களை அடைத்து வைப்பதற்கான அமைக்கப்பட்டுள்ள இரும்புக்கூண்டுக்குள், அமைச்சர்களை அடைத்து வைத்தார் சிறிலங்கா அதிபர் மைத்திரி்பால சிறி்சேன.

மாத்தறை மாவட்ட மதுவரித் திணைக்கள கண்காணிப்பாளர் பணியகத்தை சிறிலங்கா அதிபர் மைத்திரி்பால சிறிசேன திறந்து வைத்தார்.

இதையடுத்து, அங்கு அமைக்கப்பட்டிருந்த இரும்புக் கூண்டுக்குள், அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா  அபேவர்த்தன மற்றும் தென்மாகாண முதலமைச்சர் சான் விஜேலால் உள்ளிட்ட அமைச்சர்களை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன வேடிக்கையாக அடைத்து வைத்தார்.

maithri-prision (1)maithri-prision (2)

ஒவ்வொருவராக சிறிலங்கா அதிபர் கூண்டுக்குள் அனுப்பிய போதும், அமைச்சர் சுஜீவ சேனசிங்க மட்டும் அவரது பிடியில் இருந்து நழுவிக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

படங்கள் – டெய்லி மிரர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *