மன்னாரில் கைதான சிவகரன் பிணையில் விடுவிப்பு
மன்னாரில் நேற்றுமுன்தினம் கைது செய்யப்பட்ட இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் இளைஞரணிச் செயலாளர் சிவகரன், நேற்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
தீவிரவாத விசாரணைப் பிரிவினால் நேற்றுமுன்தினம் பிற்பகல் கைது செய்யப்பட்ட சிவகரன், வவுனியாவில் வைத்து விசாரிக்கப்பட்ட பின்னர், நேற்றுமாலை சாவகச்சேரி நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார்.
இதன்போது, சிவகரனை பிணையில் விடுவிக்க காவல்துறையினர் தரப்பில் எதிர்ப்புத் தெரிவிக்கப்படவில்லை.
இதையடுத்து, நிபந்தனைகளுடன் பிணையில் செல்ல உத்தரவிட்ட சாவகச்சேரி நீதிவான், ஆறு மாதங்களுக்கு வெளிநாடு செல்லவும் சிவகரனுக்குத் தடை விதித்துள்ளார்.