நேற்றும் நடக்கவில்லை சிறிலங்கா அதிபர் – வடமாகாண முதல்வர் சந்திப்பு
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கும், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையில் நேற்று நடக்கவிருந்த சந்திப்பு, கடைசி நேரத்தில் நாள் குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறிலங்கா அதிபர் செயலகத்தில் நேற்று இந்தச் சந்திப்பு இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும், இந்தச் சந்திப்பு இடம்பெறவில்லை என்றும், சந்திப்பு எப்போது இடம்பெறும் என்று இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே கடந்த 18ஆம் நாள் நடக்கவிருந்த சந்திப்பு வடக்கு மாகாண முதலமைச்சருக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவினால் பிற்போடப்பட்டது.
காணிகள் விவகாரம், மீள்குடியேற்ற விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்துப் பேசவே, சிறிலங்கா அதிபரும், வடமாகாண முதலமைச்சரும் சந்திப்பதற்குத் திட்டமிடப்பட்டிருந்தது.