மேலும்

திருமலையில் அமெரிக்க கடற்படைத் தளம் – உடன்பாடுகள் கைச்சாத்திடப்பட்டுள்ளதாம்

tissa vitharanaதிருகோணமலை துறைமுகத்தை அமெரிக்கக் கடற்படையின் பயன்பாட்டுக்கு வழங்குவதற்கு சிறிலங்கா அரசாங்கம்  இரகசிய உடன்பாடுகளைச் செய்திருப்பதாக,  முன்னாள் அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண  குற்றம்சாட்டியுள்ளார்.

கொழும்பில் இன்று நடத்திய செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றிய அவர்,

“அமெரிக்க உள்ளிட்ட மேற்குலக நாடுகளின் காலனித்துவ நாடாக சிறிலங்காவை மாற்றுவற்கு முயற்சிகள் இடம்பெறுகின்றன.

திருகோணமலை துறைமுகத்தை அமெரிக்க கடற்படைக்கு வழங்குவதற்குத் தேவையான உடன்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அமெரிக்கா தனது  ஆதிக்கத்தை சிறிலங்காவில் விரிவாக்கி வருகிறது. இதனால்,நாட்டின்  தேசிய பாதுகாப்பு , இறைமை என்பன கேள்விக்குறியாகியுள்ளன.

சிறிலங்கா அரசாங்கம் தன்னிச்சையாக செயற்பட்டு நாட்டை பேராபத்தில் தள்ளிவிட்டுள்ளது” என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *