சீன- சிறிலங்கா சுதந்திர வர்த்தக உடன்பாடு – விரைவில் மூன்றாவது கட்டப் பேச்சு
சுதந்திர வர்த்தக உடன்பாடு பற்றிய வரைவு, விரைவில் நடக்கவுள்ள, சீன- சிறிலங்கா அதிகாரிகளுக்கிடையிலான பேச்சுக்களின் போது இறுதி செய்யப்படும் என்று சிறிலங்காவுக்கான சீனத் தூதுவர் யி சியான்லியாங் தெரிவித்துள்ளார்.
சீனா- சிறிலங்கா இடையில் சுதந்திர வர்த்தக உடன்பாட்டைச் செய்து கொள்வது தொடர்பாக, ஏற்கனவே இரண்டு சுற்றுப் பேச்சுக்கள் நடத்தப்பட்டுள்ளன.
மூன்றாவது சுற்றுப் பேச்சுக்களில்,சுதந்திர வர்த்தக உடன்பாடு குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும்.
பாரம்பரிய நட்புறவு கொண்ட இரண்டு நாடுகளுக்கும் இடையில் விரைவாக, சுதந்திர வர்த்தக உடன்பாடு செய்து கொள்ளப்படுவதில் சீனா ஆர்வமாக உள்ளது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.