மகிந்தவுக்கு கல்லீரல் பாதிப்பு – மருத்துவர்கள் எச்சரிக்கை
சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு கல்லீரலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக, சிங்கள ஊடகம் ஒன்றை மேற்கோள்காட்டி இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
மகிந்த ராஜபக்சவுக்கு கல்லீரலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் அவரது உடல்நிலை மோசமடைந்திருப்பதாகவும், சிங்கள ஊடகம் ஒன்றும், செய்தி வெளியிட்டுள்ளதாக இந்திய ஊடகம் குறிப்பிட்டுள்ளது.
இதையடுத்து, மது அருந்துவதை குறைத்துக் கொள்ள வேண்டும் என்றும், இல்லையெனில் கல்லீரலுக்கு மேலும் பாதிப்பு ஏற்படும் என்றும், மகிந்த ராஜபக்சவுக்கு, மருத்துவர்கள் எச்சரித்திருப்பதாகவும், அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.