மேலும்

சிறிலங்காவின் புதிய காவல்துறை மா அதிபராக பூஜித ஜெயசுந்தர நியமனம்

pujith-msசிறிலங்காவின் 34 ஆவது காவல்துறை மா அதிபராக, பூஜித ஜெயசுந்தரவை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நியமித்துள்ளார்.

சிறிலங்கா அதிபர் செயலகத்தில் இன்று பி்ற்பகல், பூஜித ஜெயசுந்தரவுக்கான நியமனக் கடிதத்தை, மைத்திரிபால சிறிசேன வழங்கினார்.

பூஜித ஜெயசுந்தரவை புதிய காவல்துறை மா அதிபராக நியமிக்கும்படி, நேற்று முன்தினம் அரசியலமைப்பு சபை, சிறிலங்கா அதிபருக்குப் பரிந்துரை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

pujith-ms

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *