மேலும்

வெளிநாடுகளுடன் உறவுகளை வலுப்படுத்தும் சிறிலங்கா புலனாய்வு அமைப்புகள்

globe_connectவெளிநாட்டுப் புலனாய்வு அமைப்புகளுடனான உறவகளை சிறிலங்கா புலனாய்வுப் பிரிவுகள் வலுப்படுத்திக் கொள்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக, சிறிலங்கா பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

வெளிநாட்டு சக்திகளால் ஏற்படக் கூடிய அச்சுறுத்தல்களை அடையாளம் காண்பதற்காகவே, வெளிநாட்டுப் புலனாய்வு அமைப்புகளுடன் சிறிலங்கா புலனாய்வு அமைப்புகள், உறவுகளை வலுப்படுத்திக் கொள்ளவுள்ளன.

குறிப்பாக தீவிரவாதச் செயற்பாடுகள், போதைப் பொருள் கடத்தல், இணையக்குற்றங்கள், போன்றவற்றைக் கண்டறிவதற்கு, வெளிநாட்டுப் புலனாய்வு அமைப்புகளின் உதவியைப் பெற்றுக்கொள்ள சிறிலங்கா புலனாய்வு அமைப்புகள் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *